திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு வருத்தப்படுவது ஏன்? போலியான வருத்தம்.. ஞானவேல்ராஜா அறிக்கையை ஏற்க சசிகுமார் மறுப்பு!!
பருத்தி வீரன் தயாரிப்பு விஷயத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் இயக்குநர் அமீர் மீது வைத்த எதிர்மறை கருத்து சர்ச்சையான நிலையில், இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக பேசினர். பருத்தி வீரன் படத்தை ஞானவேல் தொடங்கிய சிறிது நாளில் கைவிட்டதாகவும், அமீர் பலரீடம் பணம் வாங்கி படத்தை முடித்ததாகவும், நானே அமீருக்கு பணம் தந்தேன் எனவும் சசிகுமார் குறிப்பிட்டிருந்தார். இதையே சமுத்திரக்கனியும் தனது நீண்ட கடிதத்தில் விளக்கமாக கூறியிருந்தார்.
அவர்களை தொடர்ந்து நடிகர்கர் பொன்வன்னன், இயக்குநர் சுதா கொங்கரா, பாரதி ராஜா என பலரும் அமீருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறுப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருண்ட்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சசிகுமார், போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது.
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத கடிதம் யாருக்கு?
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.