ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புத்தூர், ரேணிகுண்டா, திருப்பதி, நகரி ஆகிய ஊர்களில் 100, 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் சமீப நாட்களாக அதிக அளவில் இருந்து வந்தது.
இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டிருந்த போது புத்தூரில் நான்கு பேர் பொருட்களை வாங்குவது போல் கடைகளில் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றுவது தெரிய வந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது நான்கு பேரில் மூன்று பேர் திருப்பதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் என்றும் அவர்கள் திருப்பதியை சேர்ந்த ரமேஷ், அவருடைய மனைவி சந்தியா, மகள் இஷா என்பதும் உடன் இருந்த மற்றொரு நபர் அவர்களின் குடும்ப நண்பரான முனிகிருஷ்னா ராவ் என்று தெரிய வந்தது.
நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த புத்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்த முனி கிருஷ்ணாராவ், தம்முடைய நண்பரான திருப்பதியை சேர்ந்த ரமேஷ் வீட்டில் தங்கி அவருடன் சேர்ந்து பங்கு சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதையும் படியுங்க: ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவமானம்.. போலீசாரை வறுத்தெடுத்த அன்புமணி!
ஆனால் பங்கு சந்தை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் நஷ்டத்தை ஈடு செய்ய கள்ள நோட்டுகளை அச்சிட முடிவு செய்து அவர்கள் youtube வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சிட பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருப்பதியில் தேவையான பொருட்களை வாங்கி அவர்கள் ரமேஷ் வீட்டில் 100, 500 ஆகிய கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
ரமேஷ் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் புழக்கத்தில் விடுவதற்கு தயார் நிலையில் இருந்த 100,500 கள்ள நோட்டுகள், கள்ள நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்படும் எந்திரங்கள், பொருட்கள், ஒரு கார் ஆகிவற்றையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.