திருச்சி : சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 69). இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆரோக்கியசாமி மகன் மற்றும் மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இதுதொடர்பான கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இன்று நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியசாமி மகன் சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஒரு வருடம் சிறை தண்டனையும், ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கியசாமியின் மனைவி தனமேரிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதறை தொடர்ந்து சசிகுமார் மற்றும் ஆரோக்கியசாமி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனமேரியை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.