திருச்சி : சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 69). இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரோக்கியசாமி அவரது மகன் சசிகுமார், அவரது மனைவி தனமேரி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகனான நெப்போலியன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆரோக்கியசாமி மகன் மற்றும் மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெப்போலியனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இதுதொடர்பான கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இன்று நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியசாமி மகன் சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஒரு வருடம் சிறை தண்டனையும், ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கியசாமியின் மனைவி தனமேரிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதறை தொடர்ந்து சசிகுமார் மற்றும் ஆரோக்கியசாமி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனமேரியை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.