தமிழகம்

தலைக்கு மேலேறிய கடன்.. ஒரு தலைமுறையே அழிந்த சோகம்!

கடன் தொல்லையால் தம்பதி உள்பட 4 பேர் என குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகர் (36) – பாலாமணி (29) தம்பதி. இவர்களுக்கு வந்தனா (10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள், வந்தனா கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே, தனசேகர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகவும், அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே தம்பதி இடையே மீண்டும் கடன் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஒரு விபரீத முடிவை எடுத்து உள்ளனர்.

இதன்படி, நேற்று பிற்பகல், மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசைக் கொலை செய்ய பானம் கொடுத்துள்ளனர். ஆனால், கசப்பு காரணமாக குழந்தைகள் அதனை கீழே துப்பிவிட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், அதற்குள் தனசேகரும், பாலாமணியும் தற்கொலைக்கு முயன்றதால், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!

பின்னர், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். தொடர்ந்து, வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

14 minutes ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

34 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

54 minutes ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

1 hour ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

This website uses cookies.