தமிழகம்

தலைக்கு மேலேறிய கடன்.. ஒரு தலைமுறையே அழிந்த சோகம்!

கடன் தொல்லையால் தம்பதி உள்பட 4 பேர் என குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகர் (36) – பாலாமணி (29) தம்பதி. இவர்களுக்கு வந்தனா (10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள், வந்தனா கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே, தனசேகர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகவும், அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே தம்பதி இடையே மீண்டும் கடன் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஒரு விபரீத முடிவை எடுத்து உள்ளனர்.

இதன்படி, நேற்று பிற்பகல், மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசைக் கொலை செய்ய பானம் கொடுத்துள்ளனர். ஆனால், கசப்பு காரணமாக குழந்தைகள் அதனை கீழே துப்பிவிட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், அதற்குள் தனசேகரும், பாலாமணியும் தற்கொலைக்கு முயன்றதால், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!

பின்னர், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். தொடர்ந்து, வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

4 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

5 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.