மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சு வாரியர். 1998 ஆண்டு நடிகர் திலீப்பைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்த அவர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ எனும் படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார்.
சினிமாவில் மஞ்சு வாரியரின் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வாயிலாக தமிழிலும் அறிமுகமானார். இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் பற்றி தகவல் ஒன்று சினிமா உலகில் தற்போது வலம்வந்துகொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக்கில் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள பிரபல மலையாள இயக்குநரான சனல்குமார் சசிதரன், நடிகை மஞ்சு வாரியர், சிலரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இது பற்றி நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. அவரது மேனேஜர்கள் பெயரையும், அவர் கடத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் தற்போது வரை ரெஸ்பான்ஸ் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார். இயக்குனரின் இந்த பதிவு மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.