அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படம் “தலைவர்169”. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது.
பீஸ்ட் பட தோல்வியினால் வேறு இயக்குனர் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், நெல்சன் தான் படத்தை இயக்கப்போகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கதைப்படி இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது. அதன்படி, ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகளாக அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.
அந்த வகையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சித்து வந்த நிலையில், அவர் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு ஹீரோயினை இயக்குனர் நெல்சன் தேடி வருவதாக கூறப்படுகிறது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.