சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அரவிந்த் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்தின் வீட்டிற்கு இரண்டு வாகனங்களில் வந்த 8 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 இடங்களில் இந்த சோதனை தொடர்கிறது.
சோதனை முடிவடைந்த பிறகு, இதுதொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரவிந்தின் வணிக நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.