தமிழ் முன்னணி நடிகர்களில் சிலர் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும், வெளி மாநிலங்களில் நடத்துவது வழக்கம். குறிப்பாக விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளி மாநிலங்களில் தமிழக கிராமங்கள் போன்று செட் போட்டு நடத்தபடுகிறது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
‘நடிகர் அஜித்குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால் தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும், வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என அஜித் மற்றம் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த்திடம் கோரிக்கை வைத்தபோது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிலேயே செட் போடுவதற்காக உரிய இட வசதி உள்ளது. படத்தின் கதைக்கு தேவை என்றால் சில படங்களுக்கு வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் ஹைதராபாத்துக்கு சென்று தமிழ்நாட்டின் ஊர்களை செட் போட்டு படமாக்குவது ஏற்புடையதல்ல’ என்றார். ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்இ யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக செய்தி வந்ததுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.