ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பதாக வானவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது.
இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவுகள் உள்ள நிலையில் கடந்த மாதம் சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது.
இதில் தப்பித்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சரத்குமார் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு திருவள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் விசாரணைக்கு தங்களை அழைத்து வர சொன்னதாக கூறி சரத்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாணாவரம் புதூர் மலைமேடு அருகே உள்ள சுடுகாடு ஓடையில் சரத்குமார் ஒரு கை, இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.