ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பதாக வானவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது.
இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவுகள் உள்ள நிலையில் கடந்த மாதம் சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது.
இதில் தப்பித்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சரத்குமார் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு திருவள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் விசாரணைக்கு தங்களை அழைத்து வர சொன்னதாக கூறி சரத்குமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாணாவரம் புதூர் மலைமேடு அருகே உள்ள சுடுகாடு ஓடையில் சரத்குமார் ஒரு கை, இரண்டு கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.