கோவையில் தனியார் மருத்துவமனை சூறையாடிய வழக்கில் வக்கீலின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை – காந்திபுரம், நூறடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன், 75 என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் வாடகைக்கு எடுத்தார்.
இதனால் இம் மருத்துவ மனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2017ம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தி, மருத்துவமனையை சூறையாடி சென்றது.
இதுதொடர்பாக போலீசார் – டாக்டர் உமாசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், மருத்துவமனையை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் உமாசங்கர் – மருதவான் ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின் ஜாமீனில் வெளியே வந்த உமாசங்கர் விபத்தில் பலியானார். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமச்சந்தின் உள்பட 13 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜேந்திரனிடம் மேலாளராக பணிபுரிந்த பிரபு, என்பவர் கேரளா, கொச்சியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொச்சி சென்று, பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.