கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே சீட் பெறுவதில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல A+ சரித்திர பதிவேடு ரவுடியான கார்த்திகேயன் (எ) துப்பாக்கி கார்திக்கை பெரவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
4 கொலை வழக்கு , 5 கொலை முயற்சி வழக்கு ஆள் கடத்தல் என 26 வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதி 147 வார்டில் திமுக பிரமுகர்கள் மாதவன் மற்றும் சதீஷ் இடையே அவர்களது மனைவிகளுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் போட்டி இருந்த நிலையில் சதீஷ் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
தேர்தலில் மாதவன் மனைவி ரமணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சதீஷ் அளித்த புகாரில் போலீசார் தேடி வந்துள்ளனர்.
அதே போல வியபாரிகளை மிரட்டி பணம் மாமூல் வசூலித்து வந்தது தொடர்பாகவும் புகார்கள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.