கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் கூடுதல் நிலத்தை மின்துறை கையகப்படுத்துவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை: விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் நஷ்ட ஈடு தராமலும் மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் அங்கலக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்திற்கு இதுவரை மின்சாரத்துறை விவசாயிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லை.
இதனிடையே கூடுதலாக 22 மீட்டர் அளவு விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருகிறது. விவசாய நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும், இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நஷ்ட ஈடு தராமலும் மின்சார துறை அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
இதே போல் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாசன சபை தேர்தல் நடந்தது. தற்போது இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முந்தைய உறுப்பினர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு தற்போது தேர்தல் நடத்துவது நியாயமாகாது. எனவே இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.