கோவை: பெட்ரோல், டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் “நவீன தொழில் நுட்பங்களை விவசாய தொழிலில் பயன்படுத்தும் போது டிராக்டர், ட்ரில்லர் ஜே.சி.பி, டிப்பர் போன்றவை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாய பொருட்கள் மற்றும் உரங்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தனர்
தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.