தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர்.
திருச்சி பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகள் மதுபாலா ஆகிய இரண்டு பேரும் தேர்வு எழுதினர்.
தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இளங்கோவன் கடந்த 20 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார்.
விடாமுயற்சியாக தற்போது 20வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியுள்ளார். மகள் மதுபாலா சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.
இவரும் தற்போது போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். அந்த வகையில் தந்தை மகள் இரண்டு பேருக்கும் ஒரே மையத்தில் இரு வேறு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர் இளங்கோவனின் விடா முயற்சியை அதிகாரிகள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.