தமிழகம்

கழன்ற கட்டில் போல்டு.. தந்தை, மகன் இறந்த பரிதாபம்!

திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (35). தையல் தொழில் செய்து வரும் இவருக்கு லோகேஸ்வரி (30) என்ற மனைவியும், கார்த்திக் ரோஷன் (9) மற்றும் யஸ்வந்த் (6) என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில், மனைவி லோகேஸ்வரி, நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.3) இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணனும், மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு வீட்டின் மாடியில் உள்ள இரும்புக் கட்டிலில் தூங்கி உள்ளனர். அப்போது லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்குச் செல்வதற்காக புறப்பட்டு உள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் மாடியில் இருந்து இருவரும் வராத காரணத்தால், அவர்களைத் தேடி மாடிக்குச் சென்று உள்ளார்.

அப்போது தனது கணவன், மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். தொடர்ந்து, அவர் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இரும்புக் கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால், இரும்புக் கட்டில் கால் முறிந்து விழுந்துள்ளது, இதனால் கட்டிலின் மேல் பகுதியில் உள்ள இடைவெளியில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இறுக்கிப் பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. அதிபர் கட்டிலில் அமரப்போவது யார்?

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.