ஆந்திராவில், தனது 2 குழந்தைகளைக் கால்வாயில் தள்ளிவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம் நெலபர்த்திபாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கஜபதி நகரில் பில்லி ராஜூ – விஜயா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ராம் சந்தீப் (10) என்ற மகனும், காருண்யா (7) என்ற மகளும் இருந்தனர். இதில், ராஜூ, பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும், ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தீப் 4ஆம் வகுப்பும், காருண்யா 1ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 17) ராஜு வழக்கம் போல் குழந்தைகளை வென்டூரில் உள்ள தனது வீட்டிலிருந்து ராமச்சந்திரபுரம் பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும்போது குழந்தைகளைக் கால்வாயில் தள்ளிவிட்டு, ராஜுவும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மகன் சந்தீப் மட்டும், நீந்திக் கரையை அடைந்து அழுதுகொண்டே வெளியில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த கிராமத்தினர், சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர்களிடம் சந்தீப் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அன்று மாலை 6 மணியளவில் காருண்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி.. மூத்த அமைச்சர் வழியில் டெல்லி விசிட்.. பரபரக்கும் களம்!
மேலும், ராஜுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் வெங்கடநாராயணா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ராஜூ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.