தமிழகம்

கிணற்றில் மிதந்த 5 வயது சிறுவனின் சடலம்? கடன் தொல்லையால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள கிணறு ஒன்றில் ஒரு ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் உடல் சடலமாக மிதந்ததை அப்பகுதியினர் கண்டுள்ளனர். இத்தகவலை அறிந்து காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பி சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அதன் பின் கிணற்றில் இருந்த ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் சடலத்தை மீட்டனர். 

இது குறித்த விசாரணையில் ஆணின் பெயர் பாலாஜி (37) என்றும் சிறுவனின் பெயர் கவின் (5) என்பதும் தெரிய வந்தது. இருவரும் தந்தை-மகன் எனவும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இது குறித்த தீவிர விசாரணையில் போலீஸார் இறங்கியபோது ஒரு அதிர்ச்சியான பின்னணி வெளிவந்துள்ளது.

பாலாஜியின் சொந்த மாவட்டம் திருவண்ணாமலை ஆகும். எனினும் அவர் திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பாலாஜிக்கு அதிகபடியான கடன் பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தனது மனைவியிடம் தான் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் சென்று கொஞ்சம் பணம் வாங்கி வருவதாக கூறி தனது 5 வயது மகனான கவினை அழைத்துக்கொண்டு ரயிலேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் ரயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் அமைந்துள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.  அந்த ரயில் நிலையம் அருகே உள்ள கிணற்றில் தனது 5 வயது மகனை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். அதன் பின் பாலாஜி தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இது சாமல்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.