Categories: தமிழகம்

‘உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டு வந்து படிக்க வையுங்கள்’: கண்ணீருடன் செக்யூரிட்டி தந்தை கோரிக்கை.!!

கோவை: உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க தமிழக முதலமைச்சர் உதவ வேண்டும் என்று கோவையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் மாணவியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள சூழலில் அங்கு படிக்கவும், அலுவல் ரீதியாக சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உக்ரைனில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக மாணவிகள் உக்ரைன் சென்றுள்ளனர். அதன்படி, கோவையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார் கோவையை சேர்ந்த மாணவி அழகு லட்சுமி.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அழகு லட்சுமியின் தந்தை கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே தன்னார்வலர்களின் உதவி கிடைத்ததால் அழகு லட்சுமிக்கு உக்ரைனில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது உக்ரைனில் 3ம் ஆண்டு படித்து மாணவி, போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை சிவக்குமாரிடம் கேட்கச் சென்றோம். நிற்கவே நேரமில்லாது, உணவக வாசலில் மும்முரமாக தனது பணியை கவனித்து வந்தார். தனது இடைவிடாத பணிக்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடும் சிரமத்திற்கு இடையில் எனது மகள் படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் கோவை வந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்போது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எனது மகள் மீண்டும் அங்கு சென்று படிக்க முடியாது. எப்படியாவது எனது மகளை மீட்டு வந்து கோவையிலேயே அவர் மருத்துவம் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் எனது மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

வறுமையிலும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த இந்த ஏழை தந்தையின் கோரிக்கைக்கு தமிழக அரசும் மத்திய அரசும் செவி சாய்க்கின்றனவா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.