Categories: தமிழகம்

மத்திய அரசு ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தது போல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் : 3 பெண்கள் கைது!!

சென்னை : மத்திய அரசு பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து , இளம் பெண்ணோடு ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டிய 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வயது ( 59 ). இவர் மத்திய அரசுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூலமாக ராதா (வயது 40) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராதா சுய தொழில் தொடங்க கடனாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை சந்திரனிடம் பெற்றுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் பணம் தராத காரணத்தினால் சந்திரன் கடந்த 2019 ஆம் ஆண்டு ராதா மீது வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் சரியான முறையில் ராதா ஆஜராகாத காரணத்தினால் சமீபத்தில் ராதாவிற்கு நீதிமன்றத்தால்  பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா சமீபத்தில் சந்திரனை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் தந்து விடுவதாகவும் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அதன் பேரில் கடந்த 19ம் தேதி கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் முதல் தெரு பகுதியில் உள்ள ராதாவின் நண்பரான புஷ்பா (வயது 49) என்பவரது வீட்டிற்கு சந்திரனை வர வைத்தள்ளார். அங்கு சந்திரன் வந்தவுடன் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கியவுடன் சந்திரனுடன் லட்சுமி (வயது 30) என்ற பெண்ணுடன் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ மற்றும் வீடியோவை எடுத்துள்ளனர்.

இதற்கு லட்சுமியின் கணவர் முருகன் என்பவரும் துணையாக இருந்துள்ளார். சந்திரன் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் இனி பணம் கேட்டால் நீ லட்சுமியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொடுங்கையூர் போலீசார் கோயம்பேடு ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா , விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த லட்சுமி அவரது கணவர் முருகன் மற்றும் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புஷ்பா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அவரிகளிடமிருந்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

4 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

4 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

5 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

5 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

6 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

7 hours ago

This website uses cookies.