கோவை: மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ராசி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.
ராசி கடந்த 2020ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவர் மருத்துவ உயர் படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராக வசதியாக மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்து வந்தார். இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் 3வது மாடியில் படிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மதியம் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் டாக்டர் செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அறைக்கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கு ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ் பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
இதையடுத்து தற்கொலை செய்துகொண்ட டாக்டர் ராசியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து ராசியின் தாய் டாக்டர் செந்தாமரைகொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.