திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் நத்தம் சாலையில் உள்ள ஒடுக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய வார்டுகள் கட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மருத்துவ மனையில் இருந்த பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.
ஜனவரி மாதம் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த பழைய வாகனங்கள் தற்பொழுது திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண், பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தை முன்புறம் 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் இழுக்க வாகனத்தின் பின்புறம் ஆண் பணியாளர்கள் அதை தள்ளிக்கொண்டு ” ஏய் இழூ ஏய் தள்ளு” என ஆரவாரம் செய்து கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் இழுத்து வந்த சம்பவம் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் சி அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
வாகனத்தை இழுத்துச் செல்வதற்கு என்றே ரெக்கவரி வாகனங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி இழுத்துச் செல்லாமல் நண்பகல் வேளையில் குறிப்பாக பெண் பணியாளர்களை கொண்டு பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையில் இழுத்து செல்ல வைத்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.