வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ், கோயம்புத்தூர் நகரத்திற்கான சிறப்பு வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது பாண்டிச்சேரி அருகே கரையை கடந்து
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை அன்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நகரின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, அச்சப்படத் தேவையில்லை ஆனால் இப்போதிருந்தே நிகழ்வை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது சரியான முன்னெச்சரிக்கையாகும்.
கோயம்புத்தூரில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை அதாவது 1977 க்குப் பிறகு முதல் முறையாக நாம் நேரடியாகப் பார்க்கப் போகிறோம். கோயம்புத்தூரை கடக்கும்போது அது வலுவிழந்து இருக்கும் ஆனால் மழை மேகங்கள் உற்பத்தி நன்றாக அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் மழையை விரும்பும் நபர் என்றால் உங்களுக்கு இந்த நிகழ்வு மிகசிறந்த பரவசம் மற்றும் அனுபவத்தை தரும் என்று நம்பலாம்,அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்
இதையும் படியுங்க: சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம்.. எங்கெல்லாம் ரெட் அலர்ட் : IMD எச்சரிக்கை!
நீலகிரி மக்கள் பாதுகாப்பாக இருங்கள்: ஞாயிறு முதல் செவ்வாய் வரை நீலகிரி பயணம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிகழ்விலிருந்து கொங்கு மண்டல மாவட்டங்களின் மற்ற பகுதிகள் பரவலாக கனமழையைக் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.