பிரியாணிக்கு சால்னா கேட்டு தகராறு செய்த மர்மநபர்கள் ஹோட்டல் ஓனரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் பகுதியில் பல்வேறு பிரியாணி உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆபிதா என்ற பிரியாணி கடைக்கு சென்ற இருவர் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்ப்பட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதில் ஒருவர் கத்தியால் ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார்.
இதனால் பதற்றமைந்த கடையின் ஊழியர்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலிசார் தகராறி ஈடுப்பட்டவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.