தமிழகம்

ஆப்ரேஷன் தியேட்டரில் கிட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் அதிசயம்

மூளை – விரல் நரம்பு இடையிலான சிக்கலான அறுவை சிகிச்சையை கிட்டார் மூலம் சுலபமாக முடித்துள்ளது பெங்களூரு தனியார் மருத்துவமனை.

பெங்களூரு: ஒருங்கிணைந்த நாடுகளின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் டிசோசா. இவர் தனது 6 வயது முதலே கிட்டாரை இசைக்கக் கற்றுக் கொண்டு உள்ளார். பின்னர், 2004ஆம் ஆண்டு முதல் தெருக்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாசிக்கத் தொடங்கி உள்ளார்.

பின்னர், 2008ஆம் ஆண்டு முதல், இவரது கிட்டார் இசைக்கு தனியான ரசிகர்கள் கிடைக்கத் தொடங்கினர். இதனால், ஜோசப் தொடர்ந்து கிட்டார் இசைத்து வந்து உள்ளார். இவ்வாறு தனது விரல், அதனை செயல்பட வைக்கும் மூளைக்கு அதிக வேலை கொடுத்து வந்து உள்ளார் ஜோசப் டிசோசா.

இதனால் அவரது மூளை மற்றும் மூளையில் இருந்து கைக்கு செயல்படும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் Task-Specific Focal Hand Dystonia (TSFHD) என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், மனம் தளராத அவர், இதனை எப்படியாவது சரிசெய்து விட வேண்டும் என அதற்கான மருத்துவத்தை தேடி உள்ளார்.

இதன் பேரில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர், அவருக்கு மருத்துவர்கள் சரண் ஸ்ரீனிவாசன் மற்றும் சஞ்சீவ் சிசி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக உடன் கூட்டணியா? தவெக மறுப்பு.. அப்போ அடுத்தது என்ன?

அப்போது, விரல்களுக்கு மூளையில் இருந்து செல்லும் நரம்பைக் கண்டறிவதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்காமல், கிட்டாரை இசைக்கச் சொல்லி, அந்த அசைவுக்கேற்ப மூளை நரம்பைக் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். இதன்படி, சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.