கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று இரவு வியாபாரத்தை முடித்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று உள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு நேரம் என்பதாலும் அருகில் உள்ள கடைகளும் பூட்டியிருந்ததாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.