மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக முத்துக்குமார் என்பவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார் .அவரது இரண்டு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் அதிகாரிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று மாலை மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் நிறுத்தியிருந்த TVS XL – வாகனங்களுக்கும் தீப்பற்றியது. மேலும் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து புகை மண்டலமாக மாறியது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுசிப்காட் தீயணைப்பு அதிகாரி பாபநாசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 தளங்கள் உள்ளன. இதில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எதுவம் அசம்பாவிதங்கள் நடந்தால் எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை கருவி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.