பட்டாசு வெடிக்கும் விபத்து… 4 வயது சிறுமி உயிரிழப்பு : சற்றும் தாமதிக்காமல் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!
நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் குழந்தைகளின் கொண்டாட்டமாக இருக்கும்.
அந்த வகையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.
பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், 4 வயதான தன் அண்ணன் மகள் நவிஷ்கா உடன் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில், நவிஷ்கா உயிரிழந்தார். விக்னேஷ் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அஜாக்கிரதை மரணம் ஏற்படுத்தியதாக விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.