சாத்தூர் அருகே தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் கருகி சேதமடைந்தன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி பேபி ராணி (வயது 45) என்பவருக்கு சொந்தமான மாதா தீப்பட்டி பேக்கேஜிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து தீக்குச்சிகளை வாங்கி தீப்பெட்டி பண்டல்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தீக்குச்சி மூடைகள் அடுக்கி வைத்த அறையில் மூடைகள் சரிந்து விழுந்ததில் தீக்குச்சிகள் உரசி தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீக்குச்சி மூடைகள் மற்றும் பக்கத்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் 2 இயந்திரங்கள் உட்பட அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பெட்டி பேக்கேஜிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.