கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்-ஐ இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன மீன் சந்தையை இன்று அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் மற்றும் இளைஞர் காங்கிரசார் சிலர் வந்திருந்தனர்.
அப்போது அவர் பேசி கொண்டிருக்கும் போதே, நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் திங்கள் நகர் பேரூராட்சி தலைவரும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான சுமன் ஊழல் செய்திருப்பதாக எம்எல்ஏ பிரின்ஸ் உடன் வந்த சிலர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், இரு பிரிவினர் இடையே கோஷ்டி பூசல் உருவாகி வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எம்.எல்.ஏ பிரின்ஸை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு சந்தையை திறந்து வைத்தார். அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.