படகுகளை எடுத்துட்டு வாங்க.. நெல்லை மக்களுக்காக ஓடோடி வந்த மீனவர்கள் : கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!!
திருநெல்வேலி மாவடடத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூத்தன்குழி உள்ளிட்ட கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், தங்கள் தலைநகரம் நெல்லை வெள்ளத்தில் மிதப்பதை அறிந்ததும் சொந்தமாக செலவு செய்து தங்களுடைய விலை உயர்ந்த கடல் படகுகளுடன் நெல்லைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு தத்தளித்துக் கொண்டு இருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். மத்திய, மாநில மீட்பு படையினரால் முடியாத இடங்களுக்கும் இவர்களால் எளிதாக செல்ல முடிந்தது.
புயலுடன் கூடிய அலை கடலுக்கு மத்தியிலும் திறமையாக மீன்பிடித்து வரும் வித்தகர்களான மீனவர்களுக்கு, நெல்லை வெள்ளம் கிஞ்சித்தும் அச்சம் ஏற்படுத்தவில்லை என்பது இதற்கு காரணம்.
இந்த நிலையில் இன்று, திருநெல்வேலியில் வைத்து மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்களை நோக்கி அவர் கையெடுத்து கும்பிட்டார்.
தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருநெல்வேலியில் வந்திருந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு லாரிகள் மூலம் படகுகளை எடுத்து செல்வதற்கு அரசு உரிய ஆவண செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.