Categories: தமிழகம்

ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் தனித்தனியே உல்லாசம்… 17 வயது சிறுமியை மிரட்டி கொடூரம் : 52 வயது காமுகன் கைது!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 52). இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி அருகில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்.

திருமணம் ஆகி மனைவி, 23 வயது மகள், 20 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அழகான மனைவி அருமையான பிள்ளைகள் இருந்தும் விவேகானந்தன் மனதில் காமம் தலைக்கேறி விட்டது.

அதன் விளைவாக தன்னுடைய ஜவுளிக்கடையில் வேலை செய்யும் சாரா என்ற இளம் விதவை பெண்ணுடன் விவேகானந்தனுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கணவன் மற்றும் பெற்றோர்களை இழந்த (பெயர் மாற்றம்) டெய்சி தன்னுடைய 2 குழந்தைகளுடனும், உடன் பிறந்த தங்கையுடனும் வசித்து வருகிறார். தற்போது 17 வயதாகும் தங்கை அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11 ஆண்டுகளாக ஆதரவற்ற டெய்சியின் குடும்பத்தை, முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமலேயே, விவேகானந்தன் பராமரித்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக டெய்சியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த விவேகானந்தன் மனதில் காமம் குடியேற, சாராவின் தங்கையான பள்ளி மாணவியிடம் சில ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டி அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தன் தங்கையுடன் விவேகானந்தன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு டெய்சி அதிர்ச்சி அடைந்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த விவேகானந்தனின் முதல் மனைவி, தன் கணவர் விவேகானந்தன் குற்றமற்றவர் என கூறி வாதிட்ட நிலையில் போலீசார் ஆதாரங்களை தெரிவித்ததும் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மைனர் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்க்காக விவேகானந்தனை காஞ்சிபுரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் விவேகானந்தன் செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூக அந்தத்துடன் வாழ்ந்து வந்த விவேகானந்தன், தனிநபர் ஒழுக்கத்தை கடை பிடிக்க தவறியதின் காரணத்தால் தற்போது கம்பி என்னும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மனைவிக்கு தெரியாமல், இளம் விதவை பெண், 17 வயது சிறுமி என மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காமுகன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஓரிக்கை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

1 hour ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

1 hour ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.