கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், அதனுடைய தீவிரத்தை காட்டி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழையானது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பையிலிருந்து மூங்கில் காட்டிற்கு ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். சில அத்தியாவசிய தேவைகளுக்காக கரைபுரண்டோடும் ஆற்றின் நடுவே, கயிறை பிடித்து மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.
கனமழை தொடரும்போதெல்லாம் இதே போன்று நிலை தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பொருட்களை அங்கிருந்து கொண்டு வருவதில் சிரமமானது ஏற்பட்டு இருக்கிறது.
மழை குறைந்தால் ஆற்றில் வெள்ளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்காலிக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.