கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் கவியருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கல் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கவியருவி பகுதியில் தொடர்ந்து ஏழு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை, ஆழியார் அணை பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு ஆர்வமாக வந்து செல்கின்றனர். நீர்வரத்து அதிகமாக வருவதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை பெய்தால் விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுபணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.