கோவை சாய்பாபா காலனி பகுதியில் குதிரை ஒன்று உடல் நிலை சரி இல்லாத நிலையில் பிரசவத்திற்கு அவதி படுவதாக ஆயுதம் என்ற விலங்குகள் மீட்புப் படையின் தலைவர் விவேக்கிற்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மீட்புப் படை நண்பர்கள் சரவணகுமார், கார்த்திக் ராஜா ஆகியோருடன் குதிரையை மீட்க சென்றனர். அப்போது சாயிபாபா காலனி, இராமலிங்கம் பள்ளி அருகில் அந்த குதிரை பொதுமக்கள் கூட்டத்தின் மத்தியில் படுத்து கிடந்தது.
HAS அமைப்பை சேர்ந்த தன்னர்வளர் பாலகிருஷ்ணன் மருத்துவர்களுக்கு தொடர்பு கொண்டார். இரவு நேரம் என்பதால் மருத்துவர் யாரும் வரவில்லை. எனவே அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரின் ஆலோசனையின் மூலம் குட்டியை வெளியில் எடுக்க முயற்சித்து மிகவும் சிரமமாக இருந்ததாலும், குதிரை மிகவும் அவதிப்பட்டது.
காலையில் மருத்துவமனை சென்று சிகிச்சை செய்ய மருத்துவர் கூறினார். இருப்பினும் குதிரையின் நிலை கண்டு அங்கு இருந்து அதை விட்டு செல்ல மனம் இல்லாமல் அருகில் இருந்த கால்நடை பரமாப்பிளர்கள் மற்றும் குதிரை வளர்ப்பவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் அங்கு வந்து குதிரையின் நிலை கண்டு குட்டி இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்றும் இப்படியே விட்டால் குதிரையின் உயிருக்கு ஆபத்து என கூறியதால் குட்டியை வெளியில் எடுக்க முயற்சித்து குட்டி கறுவில் இறந்து 2 நாட்கள் ஆனதால் தாய் குதிரை சற்று பலவீனம் ஆகி இருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது.
இருப்பினும் தொடர்ந்து குட்டியை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 பேரின் தொடர் முயற்சியால் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 2 மணியளவில் குட்டியின் இறந்த உடல் வெளியே எடுக்கப்பட்டு தாய் குதிரை காப்பாற்றப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.