தமிழகம்

’காக்கா பிரியாணியா?’.. உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை.. திருவள்ளூர் பகுதிகளில் பரபரப்பு!

திருவள்ளூர் அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டு, சாலையோரக் கடைகளில் இறைச்சிக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் கிராமத்தில் காகங்கள் கொல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பேரில், அங்கு சென்ற வனத்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 19 காகங்கள் கொல்லப்பட்டது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, காகங்களை விஷம் வைத்து பிடித்ததாக ரமேஷ் – பூச்சம்மாள் தம்பதியை வனத்துறையினர் பிடித்தனர். அப்போது, குடும்பத் தேவைக்காக காகங்களைப் பிடித்ததால், 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு அபராதம் விதித்து, தம்பதியை விடுவித்தனர்.

இருப்பினும், திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகள், தாபாக்களில் காகம் இறைச்சி சேர்த்து பிரியாணி உள்ளிட்ட உணவுகள் சமைக்கப்படுவதாகவும், எனவே இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “நயப்பாக்கம் பகுதியில் 20 காகங்களுக்கு விஷம் வைத்து உள்ளனர். அவற்றில் 19 காகங்கள் உயிரிழந்துவிட்டன. ஒரு காகத்திற்கு சிகிச்சை அளித்து, பறக்க விடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தலைமுடிக்கு தேவையான அம்புட்டு பொருளும் வீட்ல இருக்கும்போது நம்ம ஏன் வெளியில அலையணும்!!!

இந்த காகங்களை இறைச்சியாக சாலையோரக் கடைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் ஆகியவைகளில் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அளித்த புகாரில், உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபடுவர் என சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்து உள்ளார்” எனக் கூறி உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

3 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

3 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

3 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

4 hours ago

This website uses cookies.