திருவள்ளூர் அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டு, சாலையோரக் கடைகளில் இறைச்சிக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் கிராமத்தில் காகங்கள் கொல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பேரில், அங்கு சென்ற வனத்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 19 காகங்கள் கொல்லப்பட்டது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, காகங்களை விஷம் வைத்து பிடித்ததாக ரமேஷ் – பூச்சம்மாள் தம்பதியை வனத்துறையினர் பிடித்தனர். அப்போது, குடும்பத் தேவைக்காக காகங்களைப் பிடித்ததால், 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு அபராதம் விதித்து, தம்பதியை விடுவித்தனர்.
இருப்பினும், திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகள், தாபாக்களில் காகம் இறைச்சி சேர்த்து பிரியாணி உள்ளிட்ட உணவுகள் சமைக்கப்படுவதாகவும், எனவே இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “நயப்பாக்கம் பகுதியில் 20 காகங்களுக்கு விஷம் வைத்து உள்ளனர். அவற்றில் 19 காகங்கள் உயிரிழந்துவிட்டன. ஒரு காகத்திற்கு சிகிச்சை அளித்து, பறக்க விடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தலைமுடிக்கு தேவையான அம்புட்டு பொருளும் வீட்ல இருக்கும்போது நம்ம ஏன் வெளியில அலையணும்!!!
இந்த காகங்களை இறைச்சியாக சாலையோரக் கடைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் ஆகியவைகளில் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அளித்த புகாரில், உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபடுவர் என சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்து உள்ளார்” எனக் கூறி உள்ளார்.
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
This website uses cookies.