Categories: தமிழகம்

கலர் கலரா ஷவர்மா…. மொத்தமாக அள்ளிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் : 12 கடைகளுக்கு தடை விதிப்பு!!

விழுப்புரம் : உரிய பாதுகாப்பு இல்லாமல் ஷவர்மாவை விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்து மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஷவர்மா போன்ற துரித உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரசு அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நகராட்சி பகுதியில் இயங்கும் 12 ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட ஷவர்மா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து 12 கிலோ ஷவர்மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை ஒன்றுக்கு 2 ஆயிரம் என ஆறாயிரம் அபராதம் விதித்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

மேலும் விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் போதிய வசதி இல்லாமல் இயங்கிய 12 ஷவர்மா கடைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கபப்டுமென எச்சரிக்கை செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

21 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

22 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

23 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

24 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.