கோவைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அரசு பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங்கில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையம் மூலம் வருவது வழக்கம். இப்படி இன்று விமான மூலம் கோவை வந்த சுற்றுலா பயணி ஒருவர் விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் ஸ்கேட்டிங்கில் பயணித்த அவர் திடீரென திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பின் தொடர்ந்தார்.
இதையடுத்து, அவர் கோவை நகர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் பின்பகுதியை பிடித்தவாறு ஹோப்ஸ் சிக்னல் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பயணித்துள்ளார். இந்த காட்சியை பேருந்தின் பின் வந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பீளமேடு போலீசார் இந்த காட்சியை வைத்து அவர் யார்..? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்..? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.