கோவைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அரசு பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங்கில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையம் மூலம் வருவது வழக்கம். இப்படி இன்று விமான மூலம் கோவை வந்த சுற்றுலா பயணி ஒருவர் விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் ஸ்கேட்டிங்கில் பயணித்த அவர் திடீரென திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பின் தொடர்ந்தார்.
இதையடுத்து, அவர் கோவை நகர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் பின்பகுதியை பிடித்தவாறு ஹோப்ஸ் சிக்னல் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பயணித்துள்ளார். இந்த காட்சியை பேருந்தின் பின் வந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பீளமேடு போலீசார் இந்த காட்சியை வைத்து அவர் யார்..? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்..? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.