கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.