கோவை : கோவையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது, வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு, வழியாக மதுக்கரை பகுதியை அடைந்தது.
கடந்த 21-ம் தேதி காலை யானை மதுக்கரை அருகே வாழைத் தோட்டத்தை கடந்து அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் வந்துவிடவே, சாதுரியமாக செயல்பட்ட வனத்துறையினர் நொடிப்பொழுதில் யானையை விரட்டினர். இதில் யானை உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கியதில் வேகமாக சென்ற ரயில் தண்டவாளத்தில் கடந்து சென்றது.
இந்நிலையில் மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதும், திடீரென ரயில் வந்தபோது சாதுர்யமாக செயல்பட்டு வனத்துறையினர், யானையை விரட்டி அடித்து காப்பாற்றிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.