விற்பனைக்காக சிறகுகள் வெட்டப்பட்ட 500 பச்சைக்கிளிகள்…மீட்டெடுத்த வனத்துறையினர்: வானில் பறக்கவிடப்பட்ட ரம்மியமான காட்சி..!!(வீடியோ)

Author: Rajesh
2 May 2022, 9:06 pm
Quick Share

திருச்சி: பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி அப்பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர் . அப்போது வீடுகளின் முன்பு கூடுகளில் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட பச்சை கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தக் குருவிகள் மற்றும் பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் வளர்வது ஆகும். எனவே இதுபோன்று வீடுகளில் வளர்ப்பது சட்ட விரோதமாகும்.இந்த வகையில் பரிந்துரை செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி கையில் சிறு கைகள் கட்டப்பட்ட நிலையில் மறக்க முடியாத நிலையில் இருந்தது. அவைகளுக்கு உணவு வழங்கும் கொடுக்கப்பட்டு வந்தது.

சிறகுகள் வளர்ந்த பின்னர் மீட்கப்பட்ட பச்சை கிளிகள் அனைத்தும் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று பறிமுதல் செய்யப்பட்ட 400 பச்சை கிளிகளில் கிளிகள் திருச்சி மாவட்டம் அடர்வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்து சென்று பறக்கவிட்டனர். மேலும் கிளி குஞ்சுகள் மற்றும் இறக்கை வெட்டப்பட்ட கிளிகள் என 100கிளிகள் உள்ளன. அதன் இறக்கை வளர்ந்த பின்னர் இதே போன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 995

0

0