தமிழகம்

மன்மோகன் சிங் மறைவு; பல்வேறு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் ரத்து! கருப்பு பேட்ச் உடன் இந்திய அணி!

மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இவரது இறப்பிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து டெல்லியில் புறப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமெ என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று (டிச.27) முதல் ஜன.1 வரை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த 7 நாட்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இதையும் படிங்க: அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!

மேலும், கருப்பு பட்டை அணிந்து இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் கருப்பு பட்டையுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதனிடையே, நாளை (டிச.28) மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.