மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இவரது இறப்பிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து டெல்லியில் புறப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமெ என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று (டிச.27) முதல் ஜன.1 வரை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த 7 நாட்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இதையும் படிங்க: அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
மேலும், கருப்பு பட்டை அணிந்து இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் கருப்பு பட்டையுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதனிடையே, நாளை (டிச.28) மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.