திருவாரூர் : உக்ரைனில் இருந்து மீண்டு சொந்த ஊருக்கு வந்த மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்கிற மாணவி உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த நிலையில், இன்று சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்திற்கு திரும்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரடியாகச் சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளின் தற்போதைய நிலை குறித்தும் மாணவியிடம் கேட்டறிந்தார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, உக்ரைன் நாட்டில் தவித்து வரும் மாணவ மாணவிகளை மீட்டு வந்துள்ள மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் அங்கு உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்டு கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டெல்டா மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களை மூடாமல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவி அபிராமி, “உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வார காலம் உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வந்தோம். ஒரு சிறிய நிலவறைக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் அடைபட்டுக் கிடந்தோம்.குறிப்பாக சுமி பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்,” என மாணவி தெரிவித்தார்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.