வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
தமிழகத்தின் பல ஊர்களுக்கு தற்போது “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடையவுள்ள நிலையில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்திற்கு தற்போது தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு பெண் சர்க்கரை கம்மியாக டீ போட்டுக்கொடுக்கச்சொல்லி கேட்க, அதற்கு விஜயபாஸ்கர் அங்கிருந்த டீக்கடையில் சிரித்துக்கொண்டே டீ போட்டுக்கொடுத்தார். விஜயபாஸ்கரின் இச்செயல் பலரின் கவனத்தை குவித்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.