ராமநாதபுரத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி, நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, திடீரென அங்கு 4 பேர் வந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள், இங்கு என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு, காதலர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அவர்களை தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, காதலனை அங்கிருந்து அவர்கள் விரட்டி உள்ளனர். பின்னர், இளம்பெண்ணை அங்கு இருந்த மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை உடன் விஜய்.. ஐகோர்ட் அனுமதி.. நடந்தது என்ன?
இதன் பேரில், புவனேஷ் குமார் (27), குட்டி (25), செல்வகுமார் (27) மற்றும் சரண் முருகன் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.