தமிழகம்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!

நெல்லையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சிறுவர்கள், அழைத்த நபரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், புதுமணை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்போது இந்தப் பள்ளியில் படித்த சில மாணவர்களுடன் பாலமுருகன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு நன்கு பழகிய நான்கு மாணவர்கள், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட நான்கு மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு பாலமுருகன் அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பேரில் பாலமுருகனைப் பார்க்க வந்த நான்கு பேரும் சேர்ந்து, ஐந்து பேராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பாலமுருகனுக்கே தெரியாமல் அந்த சிறுவர்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர்.

பின்னர், இச்செயலில் ஈடுபட்ட பிறகு சிறிது நாட்கள் கழித்து பாலமுருகனுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி மிரட்டும் வேலையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவ்வப்போது பாலமுருகனை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள் மற்றும் ரொக்கத்தையும் மாணவர்கள் அவ்வப்போது பெற்று வந்து உள்ளனர். இது ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பணம் கேட்டு பாலமுருகனை வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத பாலமுருகன், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நாதக ஸ்லீப்பர் செல்கள்.. புது குண்டு போடும் சீமான்!

மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், மாணவர்களை இவ்வாறு அழைத்துச் செல்லும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

20 minutes ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

27 minutes ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

1 hour ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

2 hours ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

2 hours ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

This website uses cookies.