ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட எம்.எஸ்.குரு, அமுதன் பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும்.
மேலும் அபராதமாக 81,90,000 ரூபாயை அனைவரும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதனை அடுத்து நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.