Categories: தமிழகம்

Online-ல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.55 லட்சம் மோசடி.. குஜராத் இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

தூத்துக்குடியில் இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி அதன் மூலம் சுமார் 55,50,000/- பணம் மோசடி செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர்கள் கைது;

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டெலிகிராம்- ல் (Telegram App) Online job மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை அனுப்பி அதில் அவர்கள் கூறிய L&T construction sites and buildings க்கு ரிவ்யூ (Review)கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்து சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் மேற்படி நபரை தொடர்ந்து தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி அவர், மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 55,49,916/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த மரம் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர்களான ஜேய் சவாலியா (24) மற்றும் மிலப் தக்கர் (22) ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 23.07.2024 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து இரண்டு பேரையும் கைது செய்து சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு Transit Warrant பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (26.07.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து குஜராத் மாநிலம் சென்று கைது செய்த சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Poorni

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

6 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

7 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

7 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

8 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

9 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

10 hours ago

This website uses cookies.