புரட்டாசி மாதத்தில் இலவச பிரியாணி… புதிய உணவக திறப்பு விழாவில் அலைமோதிய அசைவ பிரியர்கள்!!
திருவாரூர் நகர் பகுதியில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இன்றைய தினம் புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டது.
திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து அக்கடைக்கு அசைவ பிரியர்கள் படையெடுத்தனர்.
கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மக்களுக்கு டோக்கன் வழங்கி வரிசையில் வரும்படி அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர்.
புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் இலவசம் என்ற கடையின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் எதையும் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் சென்றனர்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.