சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்தபோது, சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு பிரத்யேக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும்.
பாதுகாப்பு உறுதி:
பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், காப்பீட்டுத் தொகையும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
ஆரோக்கியத்தில் அக்கறை:
தூய்மைப் பணியாளர்களுக்கு துறைசார் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க தனி திட்டம் உருவாக்கப்படும்.
கல்வியில் புரட்சி:
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, விடுதி மற்றும் புத்தகக் கட்டணங்களை அரசே ஏற்கும். எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு கல்வி ஒளி பரவும்!
பொருளாதார வலிமை:
ரூ.10 கோடி கடனுதவி ஒதுக்கீடு, 6% வட்டி மானியம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஆதரவு ஆகியவை தூய்மைப் பணியாளர்களுக்கு புது நம்பிக்கையை அளிக்கும்.
காலை உணவு திட்டம்:
சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக இலவச காலை உணவு திட்டம் தொடங்கப்படும். இது மற்ற நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கப்படும். கிராமப்புறங்களில் ஊராட்சிகள் மூலம் இலவச உணவு வழங்கப்படும்.
கனவு வீடு நனவாகிறது:
நகர்ப்புறங்களில் 30,000 குடியிருப்புகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை, மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
பணி நிரந்தரம்:
பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவடைந்தவுடன், தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.