இலவச புடவைகளை வழங்கிய நிறுவனம்… அலைமோதிய கூட்டம் : நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 5:14 pm
Quick Share

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனம் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.

Views: - 639

0

0